நாமக்கல், நவ.3- நாமக்கல் மாவட்டத் தில், ஞாயிறன்று 14 மையங் களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இந்த திறனாய்வுத் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி நண்பகல் 1 மணி யளவில் நிறைவடைந்தது. இரு தாள்களாக தேர்வு நடந்தது. மாவட்டம் முழு வதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் 4711 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் அதிக மதிப்பெண்பெறும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மைய ங்களுக்குச் சென்று தேர்வு நடைபெறு வதை கண்காணித்தார்.